இம்முறை தீபாவளி வியாபாரம் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை!

நாளை இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.நகரப்பகுதியில் பொதுமக்கள் பொருட்களைவாங்க முண்டியடிப்பது குறைவாக காணப்படுகின்றது.

வழமையாக தீபாவளி பண்டிகையின் முதல்நாள் சனக்கூட்டத்தால் யாழ்.நகரம் நிரம்பி வழியும் நிலையில் இன்று மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது .

தற்போது நாட்டிலுள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக வீடுகளிலிருந்து தீபாவளியை கொண்டாடுமாறு சுகாதாரப் பிரிவினர் மற்றும் மதத் தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை தீபாவளி வியாபாரம் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அங்காடி வியாபாரம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே யாழ்.மாநகர முதல்வரினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.