முல்லைத்தீவில் 3 வருடங்களை கடந்தும் புனரமைக்கப்படாத பாலம்!

முல்லைத்தீவு கோயில் குடியிருப்பு ஏ.35 பிரதான வீதி பாலம் முழுமையாக திருத்தப்படாமையால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

முல்லைத்தீவு – கோயில் குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவு ஏ.35 பிரதான வீதியில் காணப்படும் பாலம் மிகவும் சேதமடைந்திருந்த நிலையில் கடந்த மார்ச் 2017 ஆண்டு வீதி திருத்தும் பணி ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில், 3 வருடங்களை கடந்த நிலையிலும் இன்னும் அவ் வீதி புனரமைக்கப்படவில்லை.

இதனால் மழைக்காலங்களில் அவ் வீதியால் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் முதல் ஏனைய பயணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனினும், பாலத்தை புனரமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 வருடங்களை கடந்தும் மீள் புனரமைப்பு வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டிருப்பதுடன் குறித்த பாலத்தை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து சீரான போக்குவரத்திற்கு வழியேற்படுத்தி தருமாறும் கோரியுள்ளனர்.