மன்னார் தள்ளாடி சந்தியில் இடம் பெற்ற விபத்து!

accident 625x300 1529324118495
accident 625x300 1529324118495

மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் தள்ளாடி சந்தியில் இன்று (13) காலை சுமார் 8.15 மணியளவில் மோதி விபத்திற்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி வந்த நபர் படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த நபர் மன்னார் மாவட்டச் செயலகத்தில் புள்ளி விபர திணைக்களத்தில் கடமையாற்றுபவர் என தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் கடமையின் நிமித்தம், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் வீதிபோக்கு வரத்து பிரிவு காவல்துறையினர் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.