வவுனியா பிரதேச செயலகத்தில் குவிந்த இளம் தொழில் முயற்சியாளர்கள்!

காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1 இலட்சம் இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள்  வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதித் திகதி 15.11.2020 உடன் நிறைவுக்கு வருகின்றது.

இதனையடுத்து இன்றைய தினம் காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் 300 க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்ப படிவத்தினை ஒப்படைப்பதற்காக வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கொரோனா மற்றும் மக்களின் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் செயலக வாயிலில் நின்று இலவச விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்ததுடன் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்களையும் பெற்றுக்கொண்டனர்.