கொழும்பு சினமென் கிரான்ட் ஹோட்டலின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

images 2 1
images 2 1

கொழும்பு சினமென் கிரான்ட் ஐந்துநட்சத்திர ஹோட்டலின் உடற்பயிற்சிபிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்அன்ங்சனா ஜிம்மை சேர்ந்த ஊழியர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்..

இதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகளின் உத்தரவு கிடைக்கும்வரை அன்ங்சனா ஜிம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பிலிருந்தவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டலின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.