ஒரே மாதத்தில் 11,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்கின்றார் ஹரீன்பெர்ணான்டோ!

Harin fernanado 1
Harin fernanado 1

ஒரே மாதத்தில் 11,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி ஏனைய உலகநாடுகள் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இலங்கையில் அதிகாரிகள் எதிர்கட்சிகளை அலட்சியம் செய்வதிலும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் இலாபமடைவதற்காக சட்டங்களை மீற அனுமதிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர் என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்படி பாணந்துறை உடுகம்பொல பகுதிகளில் மக்கள் வீதியில் தீடிரென விழுந்து மரணித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள ஹரீன்பெர்ணான்டோ இதற்கு தீர்வை காண்பதற்கு பதில் அரசாங்கம் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் கவனம் செலுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.