நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பாகங்களிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது.