வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14) குறித்த சம்பவம் தொடர்பாக கடுகண்ணாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் இரகசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்ககளம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.