தீபஒளித்திருநாளினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் தீபாவளி தினவழிபாட்டு பூஜைகள் இடம்பெற்றன.
அந்தவகையில் வரலாற்று சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதாராஐப்பெருமாள் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.இதன்போது கொரோனா தொற்று முழுமையாக நீங்கவேண்டியும் வழிபாடு இடம்பெற்றிருந்தது. பூஜையில் கலந்துகொண்ட அடியார்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர்.
இன்றைய விசேட பூஜைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணீஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.