நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவறுத்தியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட நாள் நோயாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அபாய நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.