தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

Colombo Police Security
Colombo Police Security

நாளைய தினம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் இன்று நாட்டின் சகல பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட விதிகளுக்கமைய நேற்றுமுன்தினம் நள்ளிரவிலிருந்து பரப்புரைகள் நிறுத்தப்பட்டு, 48 மணித்தியால அமைதி நேரம் தற்போது நடைமுறையிலுள்ளது.

அனைத்து வாக்களிப்பு நிலையப் பகுதிகளிலும் ஒரு வேட்பாளருக்கு தலா ஒரு அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன் அதற்கு மேற்பட்ட அலுவலகங்களை நடத்திச் செல்ல முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், அதிகாரிகள் குறைவாகவுள்ள பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வடக்கு, கிழக்கிலும் வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.