நாடாளுமன்ற வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை தலைவா என கூறியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கொண்டு வந்திருந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ரஞ்சன், தனது உரையின் போது பல முறை சபாநாயகரை தலைவா என கூறியிருந்தார்.
அது குறித்து சபாநாயகரோ, ஆளும் கட்சியினரோ கவனம் செலுத்தவில்லை என்பதால், அது சம்பந்தமாக எதிர்ப்புகள் ஏற்படவில்லை.
மேலும் தன்னை தலைவா என அழைத்ததில் சபாநாயகருக்கும் விருப்பம் இருந்தமை அவரது செயற்பாடுகளின் மூலம் காண முடிந்தது என அந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற அவையில் இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.