எதிர்வரும் திங்கட் கிழமை (16.11.2020) காலை 05 மணி முதல் களனி காவல்துறை பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், கம்பஹா மாவட்டத்தில் நீர்க்கொழும்பு, ஜா-எல, கடவத்தை, ராகம மற்றும் பேலியகொடை காவல்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகள் நாளை காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து நாளை (15.11.2020) காலை 05 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.