பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவேன் – யாழ் மாணவன் ஆர்வலன்

20201116 100450
20201116 100450

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என  2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி  யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்ற  மாணவன் ச .ஆர்வலன் தெரிவித்துள்ளார்.

நான் 2020 ம் ஆண்டுதரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றி 195 புள்ளிகளை பெற்றுள்ளேன் என்னைப்போல் பரீட்சைக்கு தோற்றிய  எமது பாடசாலை மாணவர்கள் அதிகளவானோர் சித்தியடைந்துள்ளார்கள்.

அதேபோல் இந்த பரீட்சையினை பொறுத்தவரைக்கும் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கு சென்றாலும் வீட்டில் அதனை மீட்டு படிப்பதன் மூலமே இந்த பரீட்சையில் இலகுவாக சித்தி அடைய முடியும்.  அத்தோடு 195 புள்ளி பெறுவதற்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் தனது பெற்றோருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

அதேவேளை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை புலமைப் பரிசில் பெறுபேற்றின் படி கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருடம் 57 வீதம் சித்தியடைந்த மாணவர்கள் இந்நிலையில் இவ்வருடம் 63 வீதமானவர்கள் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்துள்ளார்கள் என பாடசாலை அதிபர் என்.மகேந்திரராஜா தெரிவித்தார்.