அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் துமிந்த சில்வா மீது முறைப்பாடு!

asda1
asda1

முன்னாள் தொழிற்சங்கவாதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்காக அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவுக்கு இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி படுகொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்றும் முறைப்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றது.

விரைவில் இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அவ்வாறு விசாரணை நடத்தும் பட்சத்தில் மரண தண்டனைக் கைதி முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா விசாரணைக்கு ஆஜராகலாம் எனவும் கூறப்படுகின்றது.