இலங்கையில் இன்று புதன்கிழமை காலை சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நிலநடுக்கம் கண்டி மாவட்டத்தில் திகன பகுதியில் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று காலை 9.28 மணிக்கு 2.0 ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.