போகம்பறை சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதி கண்டி நகரில் கைது!

POKAMPARA
POKAMPARA

பழைய போகம்பறை சிறைச்சாலையில் இருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற கைதி, கண்டி நகரில் அலுவலகம் ஒன்றுக்கு அருகில் மறைந்திருந்த போது கைதானார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியா ​தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐந்து கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்தனர்.

இதன்போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தி அவர்களில் 3 பேரை தடுத்து கைது செய்ததுடன், ஒருவர் கொல்லப்பட்டார்.

தப்பிச் சென்றிருந்த கைதி இன்று மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டநிலையில், அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.