மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

big 165616 Coronavirus 1 2
big 165616 Coronavirus 1 2

இலங்கையில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 325 கொரோனா நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14,893 ஆக அதிகரித்துள்ளது.