முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை அவர்களுக்கு வந்தது நீதிமன்ற தடையுத்தரவு

.jpg
.jpg

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிபிள்ளை அவர்களுக்கு மாவீரர்களை நினைவு கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியினால் அவருடைய இல்லத்தில் இன்று கையளிக்கப்பட்டது
கிளிநொச்சியில் அமைந்துள்ள  கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

528a6b89 3cb1 424f 80eb c0b442dfad20
528a6b89 3cb1 424f 80eb c0b442dfad20
920e1430 290a 4585 9b97 9cef85a316e6

மாவீரர் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று வவுனியாவில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதேபோன்று இன்று(20.11.2020) கிளிநொச்சியில் அமைந்துள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிபிள்ளை அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி காவற்துறை நிலையத்தின் காவற்துறை பொறுப்பதிகாரி நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21.112020 தொடக்கம் 27.11.2020  வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது