காலநிலையில் திடீர் மாற்றம்!

GettyImages 1124515443
GettyImages 1124515443

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் மழைபெய்யக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில பகுதிகளில் 75 மில்லி மீட்டர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.