அரசாங்கம் முன்னெடுத்துள்ள தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம்!

unnamed 31
unnamed 31

தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் மாவட்ட செயலகங்களின் கீழ் உள்ள மாவட்ட தொழில் கேந்திர மையங்களில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கோரியுள்ளது.

அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மற்றும் தொழில் பாதுகாப்புத் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

இதற்காக www.dome.gov.lk என்ற இணையதள முகவரியின் கீழ் தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.