தொடரும் சீரற்ற வானிலையினால் ஹப்புத்தளை – கல்கந்தை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் ஏற்பட்ட இந்த மண்சரிவு காரணமாக 4 தொடர் குடியிருப்பில் உள்ள 15 குடும்பங்களை சேர்ந்த 70 பேரும் அந்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.