நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்-வளிமண்டலவியல் திணைக்களம்

rain in chennai 4 800x445 jpg 710x400xt
rain in chennai 4 800x445 jpg 710x400xt

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பாகங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பாகங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.