யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர் திடீர் மரணம்

1604153940 death 2
1604153940 death 2

தென்மராட்சி – சாவகச்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்ட வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த ஒருவர் சாதாரண விடுதியில் கடந்த நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21) அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அவர் தொடர்பில் விசாரித்த போது அவருடைய வாகனச் சாரதி கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.