மேலும் 319 பேர் பூரண குணமடைவு!

Coronavirus Update 2 1
Coronavirus Update 2 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 319 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,590ஆக அதிகரித்துள்ளது.