கடற்படையைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று !

112478087 gettyimages 1210057377
112478087 gettyimages 1210057377

கடற்படையைச் சேர்ந்த 19 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனாவின் முதலாவது அலையின்போது வெலிசறைக் கடற்படை முகாமில் உருவாகிய ‘கடற்படை கொத்தணி’ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது 900 இற்கும் மேற்பட்ட கடற்படையினரும் 300 இற்கும் மேற்பட்ட அவர்களின் உறவினர்களும் தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில், கொரோனாவின் மூன்றாவது அலையில் தற்போது 19 கடற்படையினர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார்.

அவர்கள் எந்தக் கடற்படை முகாமையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.