பாடசாலை மாணவன் மீது துப்பாக்கி பிரயோகம் :வைத்தியர் கைது

kaithu

பன்னிபிட்டிய பகுதியில் பாடசாலை மாணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

46 வயதுடைய வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பிக்கிப் பிரயோகத்தையடுத்து காயமடைந்த 17 வயதுடைய மாணவன் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சந்தேக நபரை கைதுசெய்த காவல்துறையினர் அவரிடமிருந்து துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவரை நுகேகொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்தனர்.

பாடசாலை மைதானத்தில் குறித்த சிறுவன் நேற்றைய தினம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பந்து வைத்தியரின் வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்துள்ளது.

பந்தினை சிறுவன் எடுக்க முயன்றபோதே இருவருக்கிடையில் வாக்குவதம் ஏற்பட்டதையடுத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.