இன்றும் அதிகாலை 4.00 மணியளவில் பள்ளிக்குடா, பரமன் கிராய் கிராம அலுவலர் பிரிவுகளில் கடல் பெருக்கெடுத்துள்ளதாகவும்,இதன் காரணமாக கடற்தொழில் உபகரணங்கள் சிலவும் சேதம் அடைந்துள்ளதாகவும் பூநகரி பிரகேச செயலாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த கிராம அலுவலர் பிரிவில் இவ்வாறு கடல் நீர் கடற்கரை வீதியை கடந்து தரைப்பகுதிக்கு உவர் நீர் உட்புகுந்துளரளது. இதனால் கரையில் வைக்கப்பட்டிருந்த கடற்தொழில் உபகரணங்கள் சில சேதமடைந்துள்ளது.
நேற்று முந்தினம் கௌதாரி முனையிலும், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் கடல் நஈர் உட்புகுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு சந்தேகங்களுடன் உள்ளனர். அமைதியான காலநிலை காணப்படும் நிலையில் இவ்வாறு கடல் பெருக்கு ஏற்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பாகிக்கப்பட்ட பகுதியினை பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ குழுவினர் இன்று பார்வையிட்டுள்ளனர்.