நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,966ஆக அதிகரித்துள்ளது.