100 அமெரிக்க டொலர் பெறுமதியான 372 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கந்தாளை தண்ணீர்தாங்கிக்கு அருகில் நேற்றையதினம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் பண்டாரவல மற்றும் இப்பாகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கந்தாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.