போலி அமெரிக்க டொலர்களுடன் இருவர் கைது!

6ABE526B 41A6 400D AE87 30228C86D42B
6ABE526B 41A6 400D AE87 30228C86D42B

100 அமெரிக்க டொலர் பெறுமதியான 372 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவல்து​றை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கந்தாளை தண்ணீர்தாங்கிக்கு அருகில் நேற்றையதினம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் பண்டாரவல மற்றும் இப்பாகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கந்தாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.