சிலாபம் ஆராச்சிகட்டுவ காவல்துறை நிலையம் மூடப்பட்டது!

Police 2
Police 2

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப் பட்டதைத் தொடர்ந்து ஆராச்சிகட்டுவ காவல்துறை நிலையம் மூடப்பட்டது.

கொரோனா தொற்றாளராக காவல்துறை உத்தியோகிஸ்தர் ஒருவர் அடை யாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாகச் சிலாபம் காவல்துறை அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிலாபம் மற்றும் ஆராச்சிகட்டுவ பகுதிகளில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட ஏழு பேரில் குறித்த காவல்துறை உத்தியோகிஸ்தர் ஒருவரும் கெரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த காவல்துறை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை நிலையத்தில் பணியாற்றிய அனை வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆராச்சிக் கட்டுவ காவல்துறை நிலையத்தின் செயற்பாடுகள் நல்ல தரண்கட்டுவ பொது மண்டபத்தில் இடம்பெறும் எனவும் சிலாபம் காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.