அக்கரைப்பற்று பொதுச்சந்தையில் முன்னெடுக்கப்பட்ட ரப்பிட் அன்ரிஜன் பரிசோதனையில்21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் எமது செய்தி பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
இன்றையதினம் அக்கரைப்பற்று பொதுச்சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தககர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரப்பிட் அன்ரிஜன் பரிசோதனையிலேயே குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்தையில் 135 பேரிடம் முனனெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த 21 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்றையதினம் கல்முனை பிரதேசத்தில் 32 பேரும், அக்கரைப்பற்றில் 21 பேரும் அடையாளம் காணப்பட்ட நிலையில், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.