முல்லைத்தீவில் கடைகளை திறக்குமாறு இராணுவம் அச்சுறுத்தல்!

vlcsnap 2020 11 27 13h34m56s516
vlcsnap 2020 11 27 13h34m56s516

மாவீரர் நாளினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகரில் இன்று(27) வணிகநிலையங்கள் அனைத்தும் பூட்டபட்டு மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக மக்களால் அனுஷ்ட்டிக்கபட்டு வருகின்றது.

இந்த நிலையில் பூட்டபட்ட வர்த்தக நிலையங்களை அச்சுறுத்தல் மூலம் பலவந்தமாக திறக்கவைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு நகரங்களில் பூட்டியிருக்கும் கடைகளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சுயவிருப்பின் பெயரில் கடைகளை பூட்டிய உரிமையாளர்களுக்கு தனிமனித சுதந்திரம்கூட இல்லாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.