மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட நால்வர் கைது !

arrested rep. 3 0
arrested rep. 3 0

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் காவல்துறைறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வேண்டாம் என, வடக்கு கிழக்கு நீதிமன்றங்களினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன்அ வர்களின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முக்கியத்துவம் குறித்து, முகபுத்தத்தில் கருத்துக்களை வெளியிட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.