நிறுத்தி வைக்கைப்பட்டிருந்த மத்திய தபால் பரிமாற்றகத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
இதற்கமைய, முழுமையான சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தமது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள உத்தியோகத்தர்கள் தவிர ஏனைய உத்தியோகத்தர்கள், தமது சேவைப் பிரிவின் உதவி அத்தியட்சகர்களைத் தொடர்பு கொண்டு, உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.