கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 410 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதன்படி, இதுவரை16,226 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 99 அதிகரித்துள்ளது . நேற்றுமாத்திரம் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.