சிறைச்சாலைகளில் மேலும் 22பேருக்கு கொரோனா!

media xll 1515425
media xll 1515425


நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் 12கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலும் 9 கைதிகள் பூஸா சிறைச்சாலையிலும் ஏனைய கைதிகள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் நேற்று (வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது.

அதாவது, வெலிக்கடை சிறைச்சாலையில் 323 பேருக்கும் பூஸா சிறைச்சாலையில் 70 பேருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 46ஆக பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 113 கைதிகள் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.