வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மாகாறம்பைக்குளம் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
இவ் ஈகைச்சுடரினை இரு மாவீரர்களின் தந்தை சுப்பையா ஆறுமுகம் ஏற்றிவைத்திருத்தார். இதை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர், உயிர் போகும் நிலைவந்தாலும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பதை யாரும் தடுத்துட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்