நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 473பேருக்கு கொரோனா தொற்று!

images 22
images 22

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றையதினம் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதற்கமைய, கொழும்புமாவட்டத்தில் 138 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹாமாவட்டத்தில் 63 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல இரத்தினபுரி மாவட்டத்தில்இருந்து 35 பேரும் குருணாகல் மாவட்டத்தில் 14 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கேகாலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஐவர் வீதமும் களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா மூவர் வீதமும் யாழ்ப்பாணம், மொனராகலை காலி அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 107 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இதுவரை 16 ஆயிரத்து 226 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் மேலும் 6 ஆயிரத்து 168 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை நேற்றையநாளில் மாத்திடம் 13 ஆயிரத்து 286 பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத்தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது