கிளிநொச்சியை சேர்ந்த 136 பேரின் பீ சீ ஆர் முடிவுகள் வெளியானது!

1588663756
1588663756

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்டவியாபார நிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் எவருக்கும் தொற்றில்லை எனஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்றைய தினம் இதனோடுசம்மந்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 56 பி.சி.ஆர் பரிசோதனைகளில்,

ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய 55 பேருக்கும் தொற்றில்லை. தொற்று உறுதிசெய்யப்பட்டவரும் வவுனியா வடக்கு புளியங்குளத்தைச் சேர்ந்த நீர் விநியோகத்தில் ஈடுப்பட்ட வாகனத்தின் சாரதியாவர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது