மின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படாமல் இருளில் மூழ்கியது வவுனியா பேருந்து நிலையம்!

IMG a1981cafbf515db0a6bfc4cf47c601d0 V
IMG a1981cafbf515db0a6bfc4cf47c601d0 V

வவுனியா பழைய பேருந்து நிலையம் கடந்த சில தினங்களாக இருளில் மூழ்கி வருகின்றது . இதனால் பேருந்து நிலையத்தை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.

மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இதனால் மின்துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் மின்மானியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்மாற்றியும் சேதமடைந்துள்ளது .

இதனால் பேருந்து நிலையத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இதனை உடனடியாக சீமைத்துத்தருமாறு அப்பகுதி வர்த்தகர்கள் கோருகின்றனர் .

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் நகரசபையினால் பொருத்தப்பட்டுள்ள பிரகாசமான மின் குமிழ்கள் சில தினங்கள் இரவில் ஒளிர்வதில்லை அப்பகுதி எங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது .

தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையினால் நேரகாலத்திற்குள் இருள் சூழ்ந்து கொள்கின்றது எனவே இரவு வேளையில் வர்த்தக நிலையங்களைத்திறந்து வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை .

இந்நிலையை உடனடியாக சீரமைத்துத்தருமாறு பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தகர்கள் கோரியுள்ளனர் .

இவ்விடம் குறித்து நகரசபையினருடன் தொடர்புகொண்டபோது மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை உடனடியாக செயற்படுத்த முடியவில்லை . அத்துடன் மின்சாரசபைக்கு செலுத்தவேண்டிய நிலவைப் பணமும் செலுத்தப்படவில்லை இதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை நகரசபையினால் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்விடயம் குறித்து வர்த்தகர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டபோது , வர்த்தகர்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது .

இவ்விடயம் நகரசபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் இணைந்து இதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

IMG d68484d292d8fe3ce63988d72d069ee2 V