வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

images 1 5
images 1 5

கேகாலை – ருவன்வெல்ல பகுதியில் உள்ள அங்குருவெல்லவில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து 500 க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பொருட்படுத்தாமல் குறித்த மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு – நாரஹென்பிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் 14 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.