பிள்ளையானுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட நீதியமைச்சர்!

unnamed 3 4
unnamed 3 4

தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்கு நீதியமைச்சர் அலிசப்ரி பதிலளித்துள்ளார்.

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.