யாழ் மாநகரசபையின் 8ம் வட்டாத்திற்கு உட்பட்ட அன்னைசத்திர வீதி மற்றும் பிறவுண்வீதி முதலாம் குருக்கு வீதி குறித்த வட்டார உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் அவர்களின் இந்த ஆண்டுக்கான வட்டாரநிதியில் புனரமைப்பு செய்யப்பட்டது.
குறித்த புனரமைப்புத் திட்டத்தை யாழ் மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர் சிவகாந்தன் தனுஐன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக இந்த வீதி திருத்தும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் சீறற்றகாலநிலை காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் புனரமைப்பு பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .