காரைநகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

20200513 COVID 19 graphic 3
20200513 COVID 19 graphic 3

கொழும்பில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காமல், சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காத காரைநகரை சேர்ந்த ஒருவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இதனால் யாழ் மாவட்டம் முழுவதும் முடக்கப்படும் என சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் அனைத்தும் தவறானவை. சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் காரைநகரைச் சேர்ந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேரும் உள்ளடங்குவர். இவர்களுக்கு செய்யப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே காரைநகர் பிரதேசம் மட்டும் முடக்கப்படும். இதனால் யாழ் மாவட்டம் முழுவதும் முடக்கப்படுவது தொடர்பான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.