யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.
அதனை அறிந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.
எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு காவல்துறையினர், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.