மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் இன்று காலை விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானிலிருந்து 53 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனியார் வைத்தியசாலைசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.