மட்டக்களப்பில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் நேற்று (29) ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கோரவெளி காட்டுப்பகுதியில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் குறித்த பகுதியிலுள்ள நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.