மேலும் 149 பேர் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 149 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 49பேர், ஜேர்மனிலிருந்து 05 பேர், கத்தார், தோஹாவிலிருந்து இரு விமானங்களில் 36பேர் மற்றும் 59பேர் இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.