சுகாதார விதிமுறைகளை மீறிய 32 பேர் கைது

0557 o 1 696x348 1

முக்கவசங்களை அணியாமை மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 32 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக 934 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹாண தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளுக்குபொதுமக்கள் இணங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.